Friday, July 11, 2008

446. ஆணாதிக்க அமர்சிங்கும் அம்பானி அரசியலும்

அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து நடந்து வரும் மீடியா கலாட்டாவில், கீழே உள்ள செய்திக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படாதது எதிர்பார்த்தது தான் என்றாலும், இந்த திமிர் பிடித்த ஆணாதிக்க மனோபாவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

இரு தினங்களுக்கு முன், சமாஜ்வாதி கட்சியின் மூத்த, மூளை மழுங்கிய, வெட்கங்கெட்ட, காரியவாதி அரசியல்வியாதியான அமர்சிங் (அவரது கட்சியின் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு தகுந்தாற் போல!) பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி, சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, சில பெண்ணிய இயக்கங்கள், அவரை கண்டித்ததோடு, அமர்சிங் பொதுவில் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன!

நாட்டின் மூத்த பெண் அரசியல்வாதியான சோனியாவை இழிவுபடுத்தும் வகையில் அமர்சிங்கின் பேச்சு அமைந்துள்ளதாக, அந்த பெண்ணிய இயக்கங்கள் வெளியுட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இத்தனை நாள் நாகரீகமற்ற வகையில் குடுமிபிடி சண்டை போட்டு வந்த காங்கிரசுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே சமீபத்தில் மலர்ந்துள்ள திடீர் நல்லுறவைப் பற்றி செய்தியாளர்கள் அமர் சிங்கிடம் கேட்டபோது, அவர் கடுப்பாகி, "பிரகாஷ் கரத் சோனியாவை சந்திக்கச் சென்றால், அதை திருமண இரவு என்கிறீகள் !? அதே நாங்கள் சோனியாவை சந்திக்கச் சென்றால், பலாத்காரம் என்று கூறுகிறீர்களே?" என்று திருவாய் மலர்ந்துள்ளார் !

இதை லூசுத்தனமான பேச்சு என்று விட்டுத் தள்ள முடியாது. அமர்சிங்கின் ஆணாதிக்க மனோபாவமே அருவருப்பான முறையில் வெளி வந்துள்ளது !

இது இப்படி இருக்க, நண்பர் அதியமான் கீழே எழுதியிருப்பதை (அம்பானி அரசியல் பற்றி) வாசியுங்கள்!

1991 வரை இந்தியாவில் நிலவிய லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜியத்தில் (அதிகாரிகள், அரசியல்வதிகள், தொழிலதிபர்கள் மூவரின் கூட்டு. அதன் மூலம் அதிகார துஷ்பிரோயகம் மற்றும் ஊழல் வளர உதவிய சோசியலுச பாணி பொருளாதாரம்) மிக அதிகம் வளர்ந்த ஒரு நிறுவனம் ரிலயன்ஸ். பல காங்கிரஸ் தலைவர்களை விலைக்கு வாங்கி அதன் மூலம் பல லைசென்சுகளை, இறக்குமதி அனுமதிகளை (அப்போது டாலருக்கு கடும் தட்டுப்பாடு, அதனால் அரசின் கட்டுபாடு மிக அதிகம்) பெற்று, போட்டியாளர்களுக்கு அவை கிடைக்காமல் செய்து வளர்ந்தது. (இது அன்று அனைத்து முதலாளிகளும் செய்தனர்/செய்ய வேண்டிய நிர்பந்தம் ; இன்று இல்லை).

தன் வினை தன்னை சுடும். பிரனாப் முகர்ஜியை பல ஆண்டுகளாக 'வளைத்து' போட்டிருந்தது ரிலையன்ஸ். பிறகு 90களுக்கு பின், முலயம் சிங்-இன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்த (இளைய) அனில் அம்பானி, எம்.பி ஆகுவும் ஆனார். 2004 பொது தேர்தலில் முலயாம் சிங் யாதவ் பெரும் வெற்றி பெறுவார், பிரதமர் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது என்று தப்பு கணாக்கு போட்டார் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு அனில் அரசியலில் நேரடியாக இறங்கியது பிடிக்கவில்லை. மேலும் தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் கருத்து வேறுபாடுகள். கருப்பு பணம் பல ஆயிரம் கோடிகள் இருவரிடமும். ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் பெரும் அளவில், பினாமி கம்பெனி பெயர்களில், முகேஷிடம் உள்ளது.

2006இல் சகோதரர்கள் சண்டையிட்டு பிரிந்தனர். அனில், ரிலயன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலயன்ஸ் காப்பிடல் மற்றும் ஒரு எனர்ஜி / கட்டுமான நிறுவனத்தையும் வைத்துகொண்டார். முகேஸின் கட்டுப்பாட்டில் ரிலயன்ஸ்நிறுவனம், இருவருக்குள்ளும் இன்னும் கடும் விரோதம் ; திரை மறைவு நாடகங்கள்..

சமாஜ்வாடி கட்சி இன்று அனில் அம்பானியின் பக்கம் பலமான ஆதரவாக உள்ளது. (பல நூறு கோடிகள் கொடுத்திருப்பார் !!). காங்கிரஸ் அமைச்சரவையில் உள்ள பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா முகேஸின் ஆள். அதனால் தான் 'ரிலயன்ஸ் பெட்ரோலிய நிறுவனம் ஏற்றுமதி செய்து ஈட்டிய 35% லாபம்மிக மிக அதிகம். அதற்கு உச்ச கட்ட வரி (windfall tax) விதிக்க வேண்டும்' என்று சமாஜ்வாடி கட்சி சில காலமாக கூச்சல் போடுகிறது.

இடது சாரிகள் ஆதரவு வாபஸ் ஆனவுடன், காங்கிரஸ் அரசுக்கு இன்று சமாஜ்வாடி கட்சியின் முழு ஆதரவு தேவையாகிவிட்டது. இனி அனில் அம்பானியின் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவை பதவி நீக்கம் செய்ய அவர்கள் பிரதமரை நிர்பந்திப்பார்கள். முலயாம் சிங்கின் வலது கரமான அமர்சிங் ஒரு அதிகார தரகர். பிம்ப் வேலை கூட செய்வார் என்று கேள்வி. அபாயகரமான ஒரு அரசியல்வாதி.

இனி தான் இருக்கிறது நாடகம்!

தன் வினை தன்னைச் சுடும். ரிலயன்ஸ் எந்த வகையில் அரசியல்வாதிகளை வாங்கி வளர்ந்ததோ அதே வழியில் விழ வாய்ப்பு ஏற்படும் சூழல். ஆனால் அது நாட்டிற்க்கு நல்லதல்ல. ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் சுத்தீகரிப்பு ஆலை உலகின் மிகச் சிறந்த ஆலைகளிள் ஒன்று. மிக குறைந்த நாட்களில், குறைந்த செலவில் கட்டப்பட்டது. மிக மிக நவீனமானது. அதனால் தான் லாபம் அதிகம்.

அது நம் தேசிய சொத்து! இதைப் புரிந்து கொள்வது கடினம்...

மேலும் பார்க்க :

http://indianeconomy.org/2008/07/08/guest-post-mukesh-ambani-under-fire/

4 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

TEST !

ச.சங்கர் said...

யாரையோ திட்டுகிறீர்கள் என்று புரிகிறது:) யாரைனுதான் தெரியலை. இல்லை எல்லோரையுமா?

said...

//இதை லூசுத்தனமான பேச்சு என்று விட்டுத் தள்ள முடியாது. அமர்சிங்கின் ஆணாதிக்க மனோபாவமே அருவருப்பான முறையில் வெளி வந்துள்ளது !
//
நீங்கள் கூறுவது சரியே... அம்பானிகளும் லேசுப்பட்டவர்கள் அல்ல

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
இந்த வெக்கங்கெட்ட அமர்சிங்கை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது, சரியான specimen !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails